ராமநாதபுரத்தில்
மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட முயற்சி செய்தபோது போலீசார் 314 விவசாயிகளை கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரத்தில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயி பாக்கியநாதன் தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் நெல் மற்றும் மிளகாய் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நெல்லுக்கு ஏக்கருக்கு 20,000 மிளகாய்க்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, முதுகுளத்தூர், திருவாடனை, ஆர்எஸ் மங்கலம், பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பேரணியாக சென்ற போது ராமநாதபுரம் அரசு பணிமனை முன்பு போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து விவசாயிகள் ரயில்வே ஸ்டேஷன் நோக்கி செல்ல முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 63 பெண்கள் உட்பட 314 விவசாயிகள் கைது செய்து தனியார் திருமண மஹாலில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர். விவசாயிகளின் போராட்டத்தால் ராமேஸ்வரம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics