திருப்பூர், நவ. 22:
திருப்பூர் மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பாக ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை (நவீன வாசக்டமி) இருவார விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு ரதம் மற்றும் பள்ளி, கல்லுரி மாணவ மாணவிகள் கலந்துகொண்ட பேரணி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்த ரதம் பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு சென்றது.
மாணவ மாணவிகள் பேரணி தென்னம்பாளையம் அரசு பள்ளியில் நிறைவடைந்தது. இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மற்றும் இணை இயக்குனர் நலப்பணிகள் ராமசாமி, குடும்ப நல துணை இயக்குனர் கௌரி,மகப்பேறு பிரிவு துறைத்தலைவர் மோகன சுந்தரி,உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை, மாவட்ட விரிவாக்க கல்வியாளர்; ராணி, டாக்டர் கீதா மாலதி, மாவட்ட புள்ளி விவர உதவியாளர் பிரபாகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.