திருப்பூர் ஜூலை: 17
சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில், வரும் 18ம் துவங்கி நான்கு நாட்கள் நடைபெறும் கட்டட கட்டுமான பொருட்களுக்கான கண்காட்சி திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள வித்யா கார்த்திக் மகாலில் கன்ஸ்ட்ரோ மெகா 2024 என்ற பெயரில் கண்காட்சி நடைபெறுகிறது. தினமும், காலை, 9 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடக்கும் இந்த கண்காட்சியில் கட்டட கட்டுமானத்திற்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் புதிய தொழில் நுட்பங்களை பொதுமக்களுக்காக 300 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட உள்ளது
இது குறித்து கண்காட்சி சேர்மன் ஜனார்த்தனன் கூறுகையில் இந்த ஆண்டு 19வது ஆண்டாக கட்டுமானப் பொருட்கள் கண்காட்சியை நடத்துகிறோம். சுமார் 350 கோடி ரூபாய் அளவிலான வர்த்தக விசாரணை இருக்கும் என எதிர்பார்க்கிறோம். நாள்தோறும் புதிய டிசைன்கள், தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருகிறது . அதற்கேற்ப கட்டட பொறியாளர்களும் வீடு கட்டுவோரும் கட்டடம் கட்டும் எண்ணத்துடன் இருப்போர் அனைவருக்கும் கட்டுமான பணி சார்ந்த ‘அப்டேட்’ ஆக இந்த கண்காட்சியை நடத்துகிறோம்.
வீடுகளின் முகப்பு கதவு துவங்கி சமையலறை வரை தேவைப்படும் கட்டுமான பொருட்களின் தற்போதைய வரவு வரை கண்காட்சியில் இடம் பெறும்.மழை நீரை சேகரித்து, குடிநீராக மாற்றும் இறக்குமதி தொழில்நுட்பம், மாடுலர் கிச்சன், எடை குறைந்த மெகா சைஸ் டைல்ஸ், செயற்கை மார்பிள், டிஜிட்டல் லாக், பயோ செப்டிக் டேங்க் என, இதுவரை கண்டிராத, கற்பனைக்கு எட்டாத தயாரிப்புகள் கண்காட்சியில் இடம் பெறுகிறது.
துவக்க விழாவில், அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் கிறிஸ்துராஜ், எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் பங்கேற்கின்றனர் என்றார் சந்திப்பின் போது ஒருங்கிணைப்பாளர் குமார் சண்முகம் முன்னாள் தலைவர் ஸ்டாலின் பாரதி உள்ளிட்ட சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் நிர்வாகிகள் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.