சங்கரன்கோவில். ஆக.7.
தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் நகர திமுக சார்பில் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், நகர அவைத் தலைவர் முப்புடாதி, மாவட்டத் துணைச் செயலாளர் ராஜதுரை, மதிமுக மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன், ஆதி தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் தென்னரசு, ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஆதவன், திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் மகாலிங்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் பீர் மைதீன், தொமுச மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல் நெல்சன் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கலைஞரின் புகழுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் பெரிய துரை, பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, முன்னாள் நகர செயலாளர் ராஜதுரை,
நெசவாளர் அணி சந்திரன், வக்கீல் அணி பிரபாகரன், மாவட்ட பிரதிநிதி செய்யது அலி, வார்டு செயலாளர்கள் வாழைக்காய் துரைப்பாண்டியன், தங்கவேலு, காளிச்சாமி, வைரவேல், செந்தில்குமார், மாரியப்பன், வீராசாமி, தடிகாரன், பாட்டத்தூர் ராமலிங்கம், மாரியப்பன் ,பழனிச்சாமி, நகராட்சி கவுன்சிலர்கள் புஷ்பம் ,விஜய், செல்வராஜ் மற்றும் வெங்கடேஷ், வீரமணி, ஜான்சன், ஜெயக்குமார் தொமுச சங்கர்ராஜ்,மதிமுக நகர செயலாளர் ரத்தினவேல்குமார், ஒன்றிய செயலாளர் சசி முருகன், மாவட்ட பிரதிநிதி ஜலாலுதீன், காளியப்பன், பூக்கடைபொன்னுச்சாமி, ஆதித்தமிழர் பேரவை குணசேகர், திராவிட தமிழர் கட்சி மதன் திராவிட வீரன் தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.