தஞ்சாவூர் ஜூலை.1
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கட்டுரை ,பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப் பதாவது:
தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாள் விழாவாக இனி கொண்டாடப்படும் என முதலமை ச்சரால் அறிவிக்கப்பட்டு ள்ளது இந்த விழாவை கொண்டாடும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடை பெற உள்ளது
மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 10 ஆயிரமும்,இரண்டாவது பரிசாக 7 ஆயிரமும், மூன்றாவது பரிசாக 5 ஆயிரம் என பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.
கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி யில் ஜூலை 9ஆம் தேதி தஞ்சாவூர் மேம்பாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9:30 மணிக்கு தொடங்கி நடைபெறும் கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு ஆட்சி மொழி தமிழ் ஆகும் .பேச்சுப் போட் டிக்கான தலைப்பு குமரித்தந்தை மார்சல் நேசமணி ,தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணா நிதி ஆகும்.
பங்கேற்பு படிவம் ,போட்டிகள் குறித்த விரிவான விதிமுறைகள் ஆகியவை முதன்மை கல்வி அலுவலர் மூலமாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை வாயிலாக தெரிவிக்க ப்படும். இந்த போட்டிகளில் மாணவ ர்கள் பங்கேற்று பயன் பெறலாம் மேற்கண்டவாறு அதில் கூறப்பட் டுள்ளது.