ஈரோடு மே 1
ஈரோடு மாவட்ட அனை த்து தொழில் வணிக சங்கங் களின் கூட்டமைப்பு (பாட்டியா) சார்பில் தொழில் வர்த்தக கண்காட்சி நாளை (2 ந் தேதி) தொடங்கி ஈரோடு 4 நாட்கள் நடைபெறுகிறது.
ஈரோடு பரிமளம் மகாலில் நடக்கும் இந்த கண்காட்சியின் தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்குகிறார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா முன்னிலை வகிக்கிறார்.இதில் அமைச்சர்கள் முத்துசாமி அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்து விழா மலரை வெளியிடுகிறார்கள். இதை கே ஈ பிரகாஷ் சந்திர குமார் எம் எல் ஏ . பெற்று கொள்கிறார்கள்.
இது குறித்து கூட்ட மைப்பு தலைவர் வி கே ராஜ மாணிக்கம் கூறியதாவது:
இந்த கண்காட்சியில் 210 அரங்குகள் அமைக்கப்படுகின்றன இதில் சிறு குறு தொழில் அமைச்சகத்தின் கீழ் பதிவு பெற்ற 110 அரங்குகளுக்கு மத் திய மாநில அரசுகளின் மானியம் வழங்கப்படுகிறது.
தமிழகத்திலேயே மிக அதிக அளவு மானியம் இந்த கண்காட்சி மூலம் ஈரோடு மாவட்டம் பெற்றுள்ளது. இக்கண்காட்சியின் முக்கிய நோக்கம் எதிர்காலத்தில் ஈரோடு மாவட்டத்தில் கோவையில் இருப்பது போன்ற மிகப்பெரிய தொழில் வர்த்தக கண்காட்சி அரங்கினை அமைப்பதா கும். இதற்காக அரசிடம் 10 ஏக்கர் நிலம் கேட்டு உள்
ளோம். நிலம் கிடைத்தால் சங்கம் மூலமாகவே வர்த்தக மையம் அமைக்கப்படும். இக்கண்காட்சியில் மொத்தம் 30 பெண் தொழில் முனை வோர்கள் கலந்து கொள்கின் றனர்.
கண்காட்சியில் புதிய தொழில்நுட்பம் புதிய கருத் துக்கள் கொண்டு அமைக்கப் படும் ஸ்டால்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். அதைத்தவிர மாணவ மாண விகளுக்கான போட்டிகள் மருத்துவ முகாம் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இவ்வாறு கூறினார்.
கண்காட்சியின் தலைவர் ஜிப்ரி கூட்டமைப்பின் செயலாளர் ரவிச்சந்திரன் பொருளாளர் முருகானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



