மதுரை ஆகஸ்ட் 20,
மதுரையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கோட்டத்தை சார்ந்த மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம் மேற்பார்வை பொறியாளர்/மதுரை மின்பகிர்மான வட்டம் அவர்களால் இன்று ஆகஸ்ட் 20 ந்தேதி காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை செயற்பொறியாளர் உசிலம்பட்டி அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளதால் கிழக்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்களது மின் விநியோக குறைகளை நேரில் சென்று தெரிவித்து பயன்பெறலாம் என்று மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பொறிஞர் எஸ். மங்களநாதன்தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்