திருப்பூர், ஏப்.08-
மக்கள் நீதி மையம் சார்பில் திருப்பூர் அவிநாசி ரோடு
பெரியார் காலணியில் உள்ள தனியார் ஹோட்டலில் தேர்தல் ஆலோசனை கூட்டம்.
திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர்
கமல் கே .ஜீவா தலைமையிலும் தெற்கு மாவட்ட செயலாளர்
செ. மகேந்திரன் வரவேற்புரையிலும் நடைபெற்றது.
இதில் அவிநாசி மாவட்ட செயலாளர் சுரேஷ்.
மாவட்ட பொருளாளர் ஜான்சன் உடுமலை மாவட்ட செயலாளர் குரு.
காங்கேயம் மாவட்ட செயலாளர் செல்வராஜ் .
வழக்கறிஞர் சாய் பரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைத்தலைவர் மௌரியா. மாநில துணைப் பொதுச் செயலாளர் அருணாச்சலம்.
மண்டல செயலாளர் ரங்கநாதன். மாநில துணைத்தலைவர் தங்கவேலு. விவசாய அணி மாநில செயலாளர்
மயில்சாமி. ஆதி திராவிடர் அணி மாநில செயலாளர் சிட்கோ சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டு நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்கள்.
நன்றியுரை நற்பணி இயக்க துணை அமைப்பாளர் சையது கபார் நன்றி உரை கூறினார். இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் பெரும் திரளாக பங்கேற்றனர்.