திருச்சி, மே 25 இந்தியாவின் முன்னணி நோட்புக் மற்றும் எழுதுபொருள் தயாரிப்பு பிராண்ட்களில் ஒன்றான ஐடிசி நிறுவனத்தின் கிளாஸ்மேட், மாணவர்களின் புத்திகூர்மையை ஊக்குவிக்கும் வகையில் ‘எடுகேம்ஸ் இன்பினிட்டி’என்னும் புதிர் போட்டியை கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா, வைஷாலி உடன் இணைந்து நடத்த உள்ளது. கல்வியை ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு இந்த புதிர் போட்டியை கிளாஸ்மேட் அறிவித்துள்ளது.
இதில் பங்கேற்று வெற்றி பெறுபவர்கள் ஹாங்காங் டிஸ்னிலேண்டை சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்லப்பட இருக்கிறார்கள்.
இந்த போட்டியின் முக்கிய நோக்கம், கற்றல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மேலும் மாணவர்கள் தங்கள் கல்வியை வேடிக்கையான முறையில் கற்க வேண்டும் என்பதாகும். அந்த வகையில், தலைமுறை தலைமுறையாக மாணவர்களால் மிகவும் விரும்பப்படும் கிளாஸ்மேட் நோட்புக்கின் கடைசிப் பக்கத்தில் ‘எடுகேம்ஸ் இன்பினிட்டி’புதிர் போட்டி இடம் பெறும். மாணவர்கள் நோட்புக்கின் கடைசிப் பக்கத்தை ஸ்கேன் செய்து ஒவ்வொரு நாளும் ஒரு புதிய விளையாட்டை விளையாடலாம்.
மேலும்
இந்தப் போட்டி குறித்து மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தியா முழுவதும் உள்ள 30 நகரங்களில் கிளாஸ்மேட் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது. இதன் மூலம் ஒரு கிளாஸ்மேட் நோட்புக்கை வாங்கி இந்த புதிர் போட்டியில் மாணவர்களை பங்கேற்க அழைப்பு விடுக்க உள்ளது.
இந்த சீசனில், உலக சாம்பியன்களுடன் சேர்ந்து விளையாட ஒரு சிறப்பான வாய்ப்பு கிடைத்துள்ளதால், இந்த பிரச்சாரம் இன்னும் உற்சாகமாகிறது. இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர்களுமான இரட்டையர்கள் பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி ஆகியோர் 30 நாட்களும் இந்த புதிர் போட்டியில் பங்கேற்க இருக்கிறார்கள். புதிர் போட்டியில் ஈடுபடுத்துவது கவனம் செலுத்துவது என்பது மனதளவில் சுறுசுறுப்பாக இருப்பதற்கான ஒரு சிறந்த வழி என்று அவர்கள் நம்புகிறார்கள்.
இது குறித்து
வைஷாலி கூறுகையில், நாங்கள் எங்கள் வீட்டில் பல்வேறு புதிர் போட்டிகளை விளையாடி உள்ளோம். அவை எங்களை மிகவும் புத்திகூர்மையாக்கி உள்ளன. இன்றைய தலைமுறையினருக்கு கற்றலை மகிழ்ச்சியானதாக மாற்றும் நடவடிக்கையில் இறங்கி உள்ள கிளாஸ்மேட்டை பார்க்கையில் எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது எனத் தெரிவித்தார்.