தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் பெ.ஜான்பாண்டியன் பிறந்த நாளை முன்னிட்டு நிலக்கோட்டை அருகே இந்திராநகர் கிராமத்தில் ஏழை எளிய பள்ளி குழந்தைகளுக்கு பேக் உட்பட கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகேவுள்ள இந்திராநகர் கிராமத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் பெ.ஜான்பாண்டியன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு
கிழக்கு மாவட்ட இணைச்செயலாளர் சரவணகுமார் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும்
100-க்கும் மேற்பட்ட ஏழை எளிய பள்ளி குழந்தைகளுக்கு பேக்,நோட்டு,புத்தகம்,பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கியும் கொண்டாடினர்,
உடன் திண்டுக்கல் மாவட்ட தலைவர் முருகன் பாண்டியன்,நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் நிலவைதேவா, மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் செண்பகபாண்டியன், மாவட்ட மகளிரணி செயலாளர் சத்தியஜோதி,மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் மருதையம்மாள் மற்றும் மாவட்ட, ஒன்றிய கிளைக்கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.