மதுரை டிசம்பர் 24,
மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை பிரிவில் “செவி வழி கேட்போம் மற்றும் உரக்கப்பேசுவோம்” என்ற தலைப்பில் பேச்சுப்பயிற்சியின் முக்கியத்துவத்தை காக்ளியர் இம்ப்ளாண்ட் குழந்தைகளுக்கு மீண்டும் வலியுறுத்தி ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதுவரை இம்மருத்துவமனையில் பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத 227 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக காக்ளியர் இம்ப்ளாண்ட் என்ற சிறப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். சிகிச்சை பெற்ற குழந்தைகளுக்கு தொடர் (Auditory Verbal Therapy) செவிப்புலன் வாய் மொழி சிகிச்சையின் மூலம் சிறப்பாக
பேச்சுப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. AVT என்ற (Auditory Verbal Therapy) செவிப்புலன் வாய் மொழி சிகிச்சையின் மூலமே காக்ளியர் இம்ப்ளாண்ட் குழந்தைகள் சிறப்பாக பேச முடியும் என்பதனை துறைத்தலைவர் பேராசிரியர் டாக்டர்.அழகுவடிவேல் M.S (ENT) திறம்பட எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மதுரை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் பேராசிரியர் டாக்டர். அருள் சுந்தரேஷ்குமார் M.S (ENT) காக்ளியர் இம்ப்ளாண்ட் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள் அளித்து சிறப்புரை ஆற்றினார். காக்ளியர் இம்ப்ளாண்ட் குழந்தைகளின் சிறப்பு கலை நிகழ்ச்சிகளும், AVT விழிப்புணர்வு குறு நாடகமும் நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காக்ளியர் இம்ப்ளாண்ட் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் திரளாகக் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காது, மூக்கு, தொண்டை துறைத்தலைவர் பேராசிரியர் டாக்டர். அழகுவடிவேல் M.S (ENT) மற்றும் இணைப்பேராசிரியர்கள் டாக்டர் தி.சிவசுப்ரமணியம், டாக்டர் இராஜா டாக்டர் நாகராஜகுருமூர்த்தி, டாக்டர் பிரவீன்குமார், டாக்டர் வினோத், டாக்டர் முருகன், பேச்சுப்பயிற்சி நிபுணர்கள் கார்த்திகேயன், சிவக்குமார், செல்வி கோகிலா, வார்டு மேலாளர் நித்தியபாலா, அலுவலக பணியாளர் சந்திரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் குமரவேல், நிலைய மருத்துவ அதிகாரிகள் டாக்டர் சரவணன், டாக்டர் முரளிதரன், DEIC மருத்துவர் செந்தில் குமார் மற்றும் மதுரை மாவட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்



