இரணியல், ஜன – 31
திங்கள் சந்தை பஸ் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு கடியப்பட்டணம் செல்வதற்காக அரசு பஸ் நின்றது. அப்போது பஸ்சில் இருந்த போதை ஆசாமி தான் வைத்திருந்த மது பாட்டிலை திறந்து குடிக்க முயன்றார். அவர் போதையில் இருந்து தள்ளாடியதால் பாட்டிலில் இருந்த மது முன் இருக்கையில் இருந்த இரண்டு பள்ளி மாணவிகள் மீது கொட்டியது.
இதை மாணவிகளும், பஸ்ஸில் இருந்த பயணிகளும் தட்டி கேட்டனர். அப்போது போதை ஆசாமி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்திற்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவத்திற்கு விரைந்து சென்று விசாரித்ததில், போதை ஆசாமி அழகன்பாறை பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி என்பதும், அவர் கேரளாவில் இருந்து ஊருக்கு வந்தபோது இந்த சம்பவம் நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்து, எச்சரித்து அனுப்பி வைத்தனர்