தென்தாமரைகுளம்., பிப். 9.குமரி சமூகவிடியல் இயக்கமும், தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ் மேல்நிலைப்பள்ளியும் இணைந்து நடத்திய போதை விழிப்புணர்வு முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித்தாளாளர் கால்வின் மற்றும் குமரி சமூக விடியல் இயக்க தலைவர் ராமசுவாமி ஆகியோர் தலைமை வகித்தனர். பங்குத்தந்தை சுரேஷ்,தென்தாமரைகுளம் பேரூராட்சித்தலைவர் கார்த்திகா பிரதாப், பள்ளி தலைமையாசிரியை பிரீத்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் டேனியல் தேவசுதன், இயற்கை ஆர்வலர் சுதாமதி ஆகியோர் விழிப்புணர்வு உரையாற்றினர். பின்னர் ஆசிரியர் தங்கப்பன் வாசிக்க போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்ட போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை தென்தாமரைகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வினிஸ்பாபு கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி தென் தாமரை குளம் பள்ளிக்கூட ஜங்ஷன்,பேரூராட்சி அலுவலகம், காட்டுவிளை வழியாக மீண்டும் பள்ளி வளாகத்தை சென்றடைந்தது. மாணவ மாணவிகள் போதை விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷங்களிட்டபடி சென்றனர். இந்நிகழ்ச்சிகளை விவேகானந்தா கல்வியல் கல்லூரி பேராசிரியர் ஜெயச்சந்திரன் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இயக்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
எல்.எம்.எஸ் மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணர்வு பேரணி

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics