கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கலையரங்கம் கட்டுவதற்கு ரூபாய் 25 லட்சம் நாகர்கோவில் மாநகராட்சி 51 வது வார்டுக்கு உட்பட்ட புல்லுவிளை மற்றும் காமச்சன்பரப்பு ஊருக்கு ஓதுக்கபட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மற்றும் வடக்கு அஞ்சு குடியிருப்பு பகுதிகளில் தெருவிளக்குகள், உடையப்பன் குடியிருப்பு ஸ்ரீமன் நாராயணசாமி கோவில் திரு தேரோட்டத்திற்கான சாலையையும் அப்பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவரும் 51 வார்டு மாமன்ற உறுப்பினருமான டாக்டர்.முத்துராமன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



