மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர்.மு. கருணாநிதியின் 101-வது பிறந்தநாளையொட்டி திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பாரதிபுரத்தில் 47- வது வார்டு முன்னாள் வார்டு செயலாளர் எஸ்.சாகுல்ஹமீது தலைமையில் கழக உறுப்பினர்களுடன் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் எஸ்அப்துல்ரஹ்மான் , எஸ்.முகமது சல்மான்கான் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.



