தருமபுரியில் அனைத்துக் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் டாக்டர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தோம், மலர் தூவியும் மற்றும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். திமுக சார்பில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆ. மணி எம்பி தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தாமரைச்செல்வன், முன்னாள் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, மாவட்ட பொருளாளர் தங்கமணி, ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், காவேரி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் முல்லைவேந்தன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, நகர செயலாளர் பூக்கடை ரவி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



