கிருஷ்ணகிரி,ஏப்.21-
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காட்டினாயனப்பள்ளி ஊராட்சி ஆடவர் கலை கல்லூரி முன்பு குப்பம் ரோட்டில் மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மாணவர் அணி துணை அமைப்பாளர் த.ராமச்சந்திரன் ஏற்பாட்டில்,ஒன்றிய கழக செயலாளர்
பி.கோவிந்தன், மாணவர் அணி அமைப்பாளர் ஜெயேந்திரன் ஆகியோர் முன்னிலையில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, வாழைப் பழம், முலாம்பழம், சாத்துக்குடி, நுங்கு, இளநீர்,மோர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், தலைமை செயற்க்குழு உறுப்பினர் ஜெ. கே. கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி.நாகராஜ், கிருஷ்ணகிரி நகர பொறுப்பாளர்கள் அஸ்லாம், வேலுமணி, ஒன்றிய துணை செயலாளர் மாறன், முருகன், பையம்மாள், கழக நிர்வாகிகள் ஆர்.கே.பழனி, சுரேந்தர், மதுபிரவீன், சூர்யா, முருகம்மாள், முருகேசன், வெங்கடேசன், தமிழ்வாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.