அஞ்சுகிராமம் ஏப்-23
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகாவிற்கு உட்பட்டது மயிலாடி பேரூராட்சி.
இப்போரூராட்சி தலைவியாக பாஜகவை சார்ந்த விஜயலெட்சுமி பாபு உள்ளார். இந்நிலையில் பேரூராட்சி கூட்டம் செயல் அலுவலர் அம்புரோஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் புதிய பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி மயிலாடி பேரூராட்சி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக சுமார் 9 கோடிக்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியை மயிலாடி பாஜக தலைவி தனது வார்டுக்கும், தனது கணவர் வார்டுக்கும் தேவையற்ற பணிகளை செய்து தமிழக அரசின் நிதியை வீணடித்ததாகவும், தொடர்ந்து திமுக கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் புறக்கணிப்பு செய்வதாகவும் கூறி திமுக கவுன்சிலர் அன்ன சுமதி முன்னிலையில் மயிலாடி பேரூராட்சி துணை தலைவர் சாய்ராம் தலைமையில் ஜெயலட்சுமி, சிவசங்கர் (எ) கண்ணன், குளோரி, சகாயமேரி, பிரின்ஸி பாக்கிய பாய் என சுமார் எழு கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் நேரில் வந்து விசாரனை செய்து விளக்கம் தந்தால் தான் கலைந்து செல்வோம் என கோஷமிட்டனர்.