மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் செய்திகளில் சந்தித்து கூறியதாவது
குடும்ப கட்டுபாடு திட்டம் என மத்திய அரசு கொண்டு வந்த போது முழுமையாக திட்டத்தை நிறைவேற்றியது தமிழகம் – மற்றும் தென்னிந்திய மாநிலங்கள் ஆனால் இன்று மத்திய அரசு மக்கள் தொகை அடிப்படையில் பாராளுமன்ற தொகுதி நிர்னயிப்பதை தமிழக அரசும், குடும்ப கட்டுபாடு திட்டத்தை அமுல்படுத்திய தென் மாநிலங்கள் எதிர்க்கிறது. மத்திய அரசு திட்டத்தை அமுல்படுத்தியதற்கு ஊக்கபடுத்தாமல் தண்டனையாக பாராளுமன்ற தொகுதி என்னிக்கையை குறைப்பது கன்டித்து தென்மாநில முதல்வர்கள், வடக்கில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களை அழைத்து ஒருங் கிணைத்து தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். பி எம் சி என்கிற 100 நாள் வேலை திட்டத்தை மத்திய நிறுத்தாமல், ஏழை மக்களை கடந்த 5-மாதங்களாக வேலை வாங்கி தற்போது சம்பளம் வழங்காததை கண்டித்தும் மத்திய அரசு தமிழகம் மற்றும் தென் மாநிலங்களை புறங்களிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். அப்போது மயிலாடுதுறை நகர செயலாளர் குண்டாமணி,நகர மன்ற துணை தலைவர் எஸ்.எஸ்.குமார் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்



