வேலூர்=19
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகர திமுக 30-வது வட்டம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா மாமன்ற உறுப்பினர், வி. எஸ். முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்கள் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப. கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதாஆனந்த்குமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முகமது சகி, மண்டல தலைவர் வீனஸ் நரேந்திரன், ஆகியோர் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் பொதுமக்களுக்கு இளநீர், மோர், தர்பூசணி, முலாம்பழம், ஆகியவற்றை வழங்கினர். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



