தென் தாமரைக் குளம் மார்ச் 23
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியின் பகுதியில் விளம்பர பதாகைகள் சாலையில் காணப்படுகிறது.
இது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நிலையில், உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து தேமுதிக மாநில ஐடி பிரிவு துணைச்செயலாளர் சிவகுமார் நாகப்பன் “மக்கள் உயிர்களை பலி வாங்க துடிக்கிறது பேரூராட்சி நிர்வாகம். சாலையில் பதாகை உடனே அகற்றப்பட வேண்டும். அகற்றத் தவறினால் தேமுதிக போராட்டம் நடத்தும்” என எச்சரித்துள்ளார்.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பார்களா? இல்லை போராட்டம் தான் தீர்வா?



