நாகர்கோவில் அக் 31
நாகர்கோவில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் மற்றும் வடக்கு மண்டல செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி 11வது வார்டு மாமன்ற உறுப்பினருமான ஶ்ரீலிஜா ஆகியோர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராஜகமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தித்திக்கும் தீபாவளியை மிகவும் சிறப்பாக கொண்டாடி மகிழ தீபாவளி பரிசுகள் அடங்கிய தொகுப்பை வழங்கினர்.
நிகழ்ச்சியில் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கிருஷ்ணதாஸ், ராஜமங்கல ஒன்றிய செயலாளர் பொன்சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



