சிவகங்கை செப்:12
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வருகின்ற 14.09.2024 (சனிக்கிழமை) அன்று முற்பகல் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு- II (தொகுதி- II மற்றும் தொகுதி- IIA) பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு நடத்தப்பெறும் தேர்வுக்கான அறிவிப்பு
தேர்வு நாள் 14.09.2024 முற்பகல்
தேர்வு மையத்திற்குள் செல்ல வேண்டிய நேரம் :9.00 மணி
விடைத்தாட்கள் (OMR Sheet) விநியோகிக்கும் நேரம் : 9.00 மணி
வினாத்தாட்கள் விநியோகிக்கும் நேரம்
(Question Paper) :9.15 மணி
தேர்வு ஆரம்பிக்கும் நேரம் : 9.30 மணி
தேர்வு முடியும் நேரம் : 12.30 மணி
தேர்வு அறையை விட்டு வெளியேறும் நேரம் : 12.45 மணி
இத்தேர்விற்கென சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 13,260 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்விற்கு சிவகங்கை தேவகோட்டை காரைக்குடி ஆகிய 3 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் சிவகங்கையில் 22 இடங்களிலும் தேவகோட்டையில் 05 இடங்களிலும் காரைக்குடியில் 16 இடங்களிலும் தேர்வு நடைபெறவுள்ளது. அதுமட்டுமன்றி இத்தேர்வு பணிக்கென 14 நடமாடும் குழுக்களும் 05 பறக்கும் படை குழுக்களும் அமைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு மையத்திற்கு தேர்வாளர்கள் 9.00 மணிக்குள் வருகை புரியவேண்டும் 9.00 மணிக்கு மேல் வருகைபுரியும் தேர்வாளர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் இதில் எந்த தளர்வுகளும் கிடையாது எனவும் தேர்வெழுதச் செல்லும் தேர்வாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஹால் டிக்கெட் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் வருகை புரியவேண்டும்
அதுமட்டுமன்றி செல்லுலார் போன்கள் மின்னனு கடிகாரங்கள் புளுடூத் சாதனங்கள் தகவல் தொடர்பு சாதனங்கள் பிற மின்னணு சாதனங்கள் மற்றும் கைப்பைகள் ஆகியவைகள் கண்டிப்பாக எடுத்துச் செல்லக்கூடாது.
எனவே தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்
தேர்வாளர்கள் மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றி சிறந்த முறையில் எழுதிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.