ராமநாதபுரம், டிச.8-
ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சியின் கிராம ஊராட்சி வார்டு நகர் வட்டார அளவில் கமிட்டி அமைப்பது குறித்து வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கட்சியை வலுப்படுத்த கிராம கமிட்டி அமைக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக வட்டார காங்கிரஸ் தலைவர்களை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம கமிட்டி அமைப்பது தொடர்பான வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட பொறுப்புக் குழு ஒருங்கிணைப்பாளரும் திருவாடானை சட்டமன்ற உறுப்பினருமான ராம.கருமாணிக்கம் தலைமையில் மாவட்ட பொருளாளர்
பொறுப்பு குழு உறுப்பினர் மற்றும் ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநில பார்வையாளர்கள் டாக்டர் செல்வராஜ், அடையாறு பாஸ்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கிராம கமிட்டி அமைப்பதின் அவசியம் குறித்து விளக்கிப் பேசினர். கூட்டத்தில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஜோதி பாலன் வரவேற்புரை ஆற்றினார்.
கூட்டத்தில்
மாநில செயலாளர் ஆனந்த குமார்,
சேவா தள காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கணேசன், மகளிர் அணி ராமலட்சுமி, வட்டார காங்கிரஸ் தலைவர் காருகுடி சேகர், திருப்புல்லாணி வட்டார தலைவர் சேதுபாண்டியன், முன்னாள் ராணுவத்தினர் சங்க தலைவர் கோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி குறித்து ஒவ்வொருவரும் தனித்தனியாக தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். அதிக அளவில் உறுப்பினர் சேர்க்கவும் கிராம கமிட்டி உருவாக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி அன்றும் இன்றும் என்றும் மக்களிடம் தனி செல்வாக்குடன் இருப்பதால் அதிக அளவில் இளைஞர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களையும் உறுப்பினராக்கி கமிட்டி உருவாக்க வேண்டும் என்று மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் ஆலோசனை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நகர் தலைவர் கோபி நன்றி கூறினார்.