திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கொடைரோடு அருகே உள்ள சுங்கச்சாவடியில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய உத்தரவின்படி 1.75 கோடி மதிப்பில் நவீன புதிய அலுவலகம் மற்றும் பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று ஸ்வச் பாரத் நிதி ரூபாய் 45 இலட்சம் மதிப்பில் புதிய நவீன பொது கழிப்பறையையும் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.சுங்கச்சாவடி வருவாய் மேலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார்,திட்ட அலுவலர் வசந்தராவ்,சீனியர் மேலாளர் சிவசுப்பிரமணியம்,பொது மேலாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,நிர்வாக மேலாளர் ராமநாதன் வரவேற்றார், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நிலக்கோட்டை டிஎஸ்பி செந்தில்குமார் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார், நிகழ்ச்சியில் புதிய அலுவலகம் திறப்பையொட்டி சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது, மேலும் இந்நிகழ்ச்சியில் சுங்கச்சாவடி ஊழியர்கள் நிர்வாக அலுவலர்கள் பொதுமக்கள் பயணிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கொடைரோடு டோல்கேட்டில் 2.20 கோடி மதிப்பில்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics