நாகர்கோவில் நவ 10
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 17 வது வார்டு பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டார் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, ஆய்வின் போது சாலை ஓரங்களில் கிடக்கும் குப்பைகள் மற்றும் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக நிற்கும் செடிகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உடன் 17வது வார்டு மாமன்ற உறுப்பினர் கௌசுகி மற்றும் முன்னாள் கவுன்சிலர் அருள் ராஜன் துப்புரவு ஆய்வாளர் பகவதி பெருமாள். மற்றும் பாபு இளஞ்செழியன், சங்கர், ராஜா சிங், ராஜா, கண்ணன், மாணிக்கம், செல்வம், சஜின் ஆகியோர்கள் இருந்தனர்.