திண்டுக்கல் மே 21
ஆத்தூர் கிராமத்தில் ருகோஸ் வெள்ளை சுருள் ஈ மேலாண்மை பற்றி செயல் விளக்க கூட்டம் .மதுரை வேளாண்மை கல்லூரி நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டாரத்தில் தங்கி பயின்று வருகின்றனர்.இதன் ஒரு அங்கமாக ருகோஸ் வெள்ளை சுருள் ஈ மேலாண்மை பற்றி பவசரண்.என் செயல் விளக்க கூட்டம் நடத்தினார்.
மேலும் பக்கெட் பொறியை பயன்படுத்தி தென்னை மரத்தில் உள்ள காண்டாமிருக வண்டினை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் எனவும் பருத்தியில் விதை நேர்த்தி பற்றியும் செயல் விளக்க பயிற்சியினை நடத்தினார்.இதில் விவசாயிகள் பங்களித்து பயிற்சி பெற்று பயனடைந்தனர்.