ஈரோடு பிப் 8
திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை காக்க ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்து முன்னனி சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதித்ததையும்
தமிழகம் முழுவதும் இந்து இயக்க பொறுப்பாளர்களை கைது செய்ததையும், திருப்பரங்குன்றத்திற்கு 144 தடை உத்தரவு போட்டு இருப்பதையும் கண்டித்து ஈரோடு மூலப் பாளையத்தில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் கார்த்தி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தடையை மீறி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் ஜெயமணி , பூர்ணிமா மற்றும் இந்து முன்னணி மாவட்ட,நகர், ஒன்றிய பொறுப்பாளர்கள்,பெண்கள் உட்பட முருக பக்தர்கள் 9 பெண்கள் உட்பட 71 பேர் கைது செய்யப்பட்டனர்.