திருப்பூர் ஜூலை: 22
கோவில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி இந்து சமய அறநிலை துறையை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்
என இந்து முன்னணி அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் காவல்துறையினர் நேற்று இரவு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் மஹாலில் அடைக்கப்பட்டனர்
இது பற்றி செய்தியாளரிடம் பேசிய மாநில தலைவர் தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் மாநில அரசின் பிடியில் இருப்பதாகவும் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள அந்த கோயில்களுக்கு பல லட்சம் நிலங்கள் இடங்கள் வீடுகள் இருப்பதாகவும் கோயில்களில் வருமானம் கோயில் சொத்துக்களை பாதுகாக்க பராமரிக்க மட்டுமே தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது இந்து சமய அறநிலை துறை ஆனால் கோயில் சொத்துக்களை பாதுகாக்க முடியாத அறநிலையத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுவது என அறிவித்திருந்தோம் ஆனால் காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தை இரவோடு இரவாக தடை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர் மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர் இந்துக்களின் ஒற்றுமையை கண்டிப்பாக நாங்கள் வெளிப்படுத்துவோம்வரும் காலத்தில் தமிழக அரசுக்கு கண்டிப்பாக பாடம் புகட்டோம் என தெரிவித்துள்ளார்.



