பரமக்குடி,டிச.20:இந்திய அரசியலைமப்புச் சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கரை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராளுமன்றத்தில் அவமதித்து பேசியதை கண்டித்து. தொடர்ந்து இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்நடைபெற்று வருகிறது. இளம் தொடர்ச்சியாக திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் போகலூர் மேற்கு ஒன்றியம் சார்பில் நேற்று
மஞ்சூர் விளக்கில் போகலூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில்
துணைச் செயலாளர்கள் ரவிச்சந்திரன் மற்றும் கலைச்செல்வி, கே கே கனகராஜ்
முன்னாள் பொது குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் தங்கராஜ், மாவட்ட பிரதிநிதி தனிக்கொடி, A.புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மாவட்ட பிரதிநிதி கார்த்திக் பாண்டியன், மாவட்ட அறங்காவல் குழு தலைவர் சுப்பராயலு, பரமக்குடி அறங்காவலர் குழுத் தலைவர் வண்ணிச்செல்வன், கருத்தனேந்தல்
ஊராட்சி மன்ற தலைவர் குருசாமி, மஞ்சகொள்ளை மாரி , பொட்டி தட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாதவன், மஞ்சூர் காமராஜ் சாத்தையா வேலுச்சாமி, கிளை செயலாளர்கள் ரவிச்சந்திரன் ராஜேஷ் கண்ணன், பாலகிருஷ்ணன், கோபி
மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கிளைக் கழகச் செயலாளர்கள் கிளைக் கழகப் பிரதிநிதிகள் அனைத்து அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள்
கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.