திண்டுக்கல் ஏப். 29
திண்டுக்கல்லில் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் 16 – ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாவட்ட தலைவர் டாக்டர் சி.ரஞ்சித்குமார் தலைமையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி திண்டுக்கல் சோலைஹால் ரோட்டில் உள்ள நயரா பெட்ரோல் பங்க் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் டாக்டர் சி. ரஞ்சித்குமார் தலைமையில் நீர் மோரை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் போது மாநில பொதுச்செயலாளர் ஜி. ராஜன் பிறந்தநாளை முன்னிட்டு அதனைக் கொண்டாடும் வகையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், பொருளாளர் வெற்றிவேல், மகளிர் அணி செயலாளர் உமாதேவி, துணைத்தலைவர்கள் கருணா, லக்னா குமார், பழனி சட்டமன்ற தொகுதி தலைவர் ஏ. ஜோஸ்வா, மருத்துவ அணி செயலாளர் கார்த்திகேயன், நிர்வாகி ரவி சட்டமன்ற நிர்வாகிகள்