தஞ்சாவூர். ஏப்ரல் 6.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத் தில் மொழிபெயர்ப்புத் துறையின் “மொழிபெயர்ப்பில் பண்பாட்டு அடையாளங்கள்” கருத்தரங்கம் வளர்தமிழ்ப்புலக் கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது
கருத்தரங்க நிகழ்வில் மொழிபெயர்ப்புத்துறை தலைவரும்,மக்கள் தொடர்பு அலுவலர் (பொ), இணைப் பேராசிரியர், முனைவர் இரா.சு.முருகன் அவர்களால் வரவேற்புரையாற்றினார். பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ.) கோ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசுகையில் . :
மொழி பெயர்ப்பில் கவிதைகளை மொழிபெயர்க்கும் போதும் அறக்கருத்துகள் மற்றும் பண்பாட்டு அடையாளங்களையும் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் எழுதிய கவிதை களை மொழி பெயர்க்கும் போது ஏற்படும் சிக்கல்கள் குறித்து விளக்கிப்பேசினார். வளர்தமிழ்ப்புல முதன்மையர் முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் வாழ்த்துரை வழங்கினார். பூண்டி திரு புட்பம் கல்லூரி இணைப் பேராசிரியர் ஆங்கிலத்துறைத் தலைவர். முனைவர்கு.சிவக்குமார், “மொழிபெயர்ப்பில் பண்பாட்டுச் சிக்கல்கள்” எனும் தலைப்பில் பேசினார் அவர் குறிப்பிடுகையில் ஒரு விடயத்தை மொழி பெயர்க்கும் போது அதன் உள்ளார்ந்த அர்த்தத் தைப் புரிந்து கொண்டு மொழி பெயர்க்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.
இணைப் பேராசிரியர் ஆங்கிலத் துறை, மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி முனைவர் லெ.ராஜேஷ், அவர்கள் “இயந்திர மொழி பெயர்ப்பும் பண்பாடுகளும்” எனும் தலைப்பிலும் பேசினார். அவருடை ய உரையின் சாராம்சமாக இயந்திர மொழிபெயர்ப்புப் பற்றிய புரிதல் மொழி பெயர்ப்பாளர்களுக்கு அவசியமானதென்பதுடன் அதனைச் செம்மைப்படுத்தினால் மட்டுமே சிறந்த மொழிபெயர்ப்பு உருவாகும் என்று கூறினார். மொழிபெயர்ப்புத்துறை இணைப்பேராசிரியர் முனைவர் சௌ.வீரலெட்சஷ்மி நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்விற்கான இணைப்புரை யை மொழிபெயர்ப்புத்துறை முனைவர்ப் பட்ட ஆய்வாளர் .த.வீரமணிகண்டன் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அனைத்து புலத்தலைவர்கள், துறைத் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், அலுவல்நிலைப் பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்