அரியலூர்,ஜூன்:04
அரியலூர் மாவட்டம், தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 27-சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/ சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் போர் சிங் யாதவ், சிறப்பு பார்வையாளர் ராகேஷ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி மக்களவை பொதுத்தேர்தல் 2024, 27-சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வாக்கு எண்ணும் மையமான தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 04.06.2024 அன்று நடைபெறவுள்ளதை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தின் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணிக்கை மற்றும் தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள இடங்கள், வாக்கு எண்ணிக்கை நிலவரம் குறித்து எழுதவற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பதாகைகள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காணிப்பு அறை, வாக்கு எண்ணிக்கைக்கு அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மேசைகள், வாக்கு எண்ணிக்கை பணிகளை கண்காணிக்கும் முறையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் குறித்தும், மேலும் வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபடவுள்ள பணியாளர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்தும் தேர்தல் நடத்தும் அலுவலர்ஃ சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள், சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள், சிறப்பு பார்வையாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மி ராணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) திருவருள், உதவி செயற்பொறியாளர் கட்டடம் ஜெயந்தி, ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் கலிலூர் ரகுமான், மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.