முதுகுளத்தூர், டிச.13
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன். தலைமையில் ஆணையாளர் ஜெய ஆனந்த் முன்னிலையில் நடைபெற்றது.
இக்காலத்தில் மேனேஜர் முனியசாமி வரவேற்பு நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து
கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள தேவைகளை எடுத்துரைத்தனர் அந்த வகையில் ஆத்தி துணை சேர்மன் – ஹைமாஸ் விளக்கு எரிய வில்லை. பழுது பார்க்க வேண்டும். ஜெய ஆனந்த் (ஆணையாளர்) உடனடியாக பழுது பார்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். முருகன் நரிப்பையூரில் கடற்கரையில் அரிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலை உள்ளது. பாதுகாப்பு நலன் கருதி தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அதன் பின்னர் கூட்டத்தில்
மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக கணக்காளர் ரமேஷ் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்.