சங்கரன்கோவில்: ஜீலை:12
சங்கரன்கோவில் நகராட்சி யில் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சென்னை உத்தரவுபடியும், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் திருநெல்வேலி அறிவுரையின் படியும், நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி ஆலோசனைபடியும்
ஆணையர் சபாநாயகம் உத்தரவின் படியும் சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் ஆலோசனையின் அடிப்படையில் துப்புரவு ஆய்வாளர்கள் மாரிமுத்து மாரிச்சாமி தலைமையில தூய்மை இந்தியா 2.0 ஸ்வச்சதா இயக்கத்தின் கீழ் தூய்மையாக இருங்கள் நோயின்றி இருங்கள்” என்ற தலைப்பின் கீழ் சங்கரன்கோவில் நகராட்சி வார்டு எண் 28ல் காந்திநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரித்து வழங்குவது குறித்தான ஆலோசனை வழங்கப்பட்டது மேலும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்தான விழிப்புணர்வு வழங்கப்பட்டது .