By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
அரியலூர்மாவட்டம்

அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

Last updated: May 21, 2024 8:52 am
May 21, 2024 72 Views
Share
SHARE

அரியலூர், மே:21

 

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை  பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில், காய்ச்சல் பாதிப்பு வராமல் தடுப்பதற்காக அனைத்து துறைகளுக்குகிடையேயான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில், காய்ச்சல் பாதிப்பு வராமல் தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய முக்கிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.  

 

மேலும், உள்ளாட்சி அமைப்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரின் கலந்து தண்ணீர் விநியோகித்தல், குழிக்குழாய் நீர் விநியோகக் குழாயில் பழுது போன்றவற்றை கண்காணித்து உடனடியாக சரிசெய்திட சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.  இம்மாவட்டத்திலுள்ள அனைத்து குடிநீர் தொட்டிகளை கண்காணித்து குறை இருப்பின் சுகாதார பணியாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

 

உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலமாக 20 கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள், செயல் அலுவலர்கள் மூலமாக 18 களப் பணியாளர்கள், நகராட்சி ஆணையர்கள் மூலமாக 52 களப்பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள்.

 

சம்பந்தப்பட்ட களப்பணியாளர்கள் காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் வகை கொசு உற்பத்தியிடங்களை அழித்தல், அப்புறபடுத்துதல் டெமிபாஸ் மருந்திட்டு லார்வாக்களை அழித்தல் மற்றும் புகைமருந்து தெளித்தல் போன்ற பணிகளை சுகாதாரத்துறை ஊழியர்கள் தினசரி ஆய்வு மேற்கொண்டு கண்காணிக்க வேண்டும்.  இதன் மூலமாக கொசுபுழு இல்லாத நிலையினை உருவாக்கி கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டும்.

 

காய்ச்சல் கண்டறியும் பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக கொசு ஒழிப்பு பணிகளுக்கு தேவையான மூலப்பொருட்களை பெற்று கொசு மருந்து தெளிக்கும் பணியினை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்களுக்கு தங்கள் சுற்றுபுறத்திலுள்ள இடங்களில் ஏடிஸ் கொசுபுழுக்கள் உருவாகும் இடங்களான பிளாஸ்டிக் பொருட்கள் பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள், சிமெண்ட் தொட்டி மற்றும் பேரல்கள் போன்ற காரணிகளை கண்டறிந்து நீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும். நீர் தேக்கி வைக்கும் பாத்திரங்களை வார ஓரு முறை தேய்த்து கழுவி சுத்தம் செய்து கொசு புகாத வண்ணம் மூடி வைக்க போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். 

 

அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் தேசிய ஊரக நலப்பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், அங்கன்வாடி பணியாளர்கள்,  பள்ளி மாணவர்கள் ஆகியோர் பொது சுகாதாரத் துறையுடன் சேர்ந்து தூய்மைபணி (Mass Cleaning) மேற்கொள்ளவேண்டும்.  மேலும், அந்த சமயத்தில், காய்ச்சல் தடுப்பு முகாமும் நடத்தப்பட்டு அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படவேண்டும்.  

 

பொதுமக்கள் காய்ச்சல் கண்டவுடன் அரசு மருத்துவமனைகள் அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று முறையான சிகிச்சை பெற அறிவுறுத்தப்படுகிறது. அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் 24 மணி நேரமும்  காய்ச்சலால் வரும் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.  காய்ச்சல் அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மருத்துவ முகாம், நிலவேம்பு குடிநீர், கொசு ஒழிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அனைத்து வகையான மருந்துகளும் கையிருப்பில் உள்ளதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டது.

 

காய்ச்சல் தொடர்பாக அரசு மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளில் நோய் ஆய்வுப்பணி பிரத்தியேகமாக சுகாதார ஆய்வாளர்களை ஈடுபடுத்தி அதன் விபரங்கள் சம்மந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டவுடன் நோய்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

 

தொற்றுநோய்கள் குறித்தும் அவைகள் பரவும் விதம் குறித்தும், பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு விதமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சுகாதாரத் துறையின் மூலமாக பொதுமக்களுக்கு நேரிடையாகவும் பல்வேறுபட்ட ஊடகங்கள் மூலமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். 

 

எனவே, அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து பணியாற்றி அரியலூர் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல், டெங்குகாய்ச்சல் பாதிப்பு வராமல் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்தார்.

 

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.முத்துக்கிருஷ்ணன், மற்றும் மருத்துவர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
சேலம்மாவட்டம்

சந்தியூர் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம்

September 18, 2024 42 Views
மரம் வளர்ப்பின் அவசியம் விழிப்புணர்வு
மலர் தூவி மரியாதை
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
பெரிச்சி பாளையத்தில் அண்ணமார் காலனி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?