கோவை பிப்:25
கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு ஓபிசி ரைட்ஸ் மாநில உயர்நிலை கூட்டு கமிட்டி கூட்டம் தலைவர் ரத்ன சபாபதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களாக பெண்களின் பாதுகாப்பு அண்மைக்காலமாக கேள்விக்குறியாகி வருகிறது கல்வி நிலையங்கள் முதல் காவல் பணி வரை பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு தொடர்ந்து பலியாகி வருகிறார்கள்.
இதற்கு காரணங்கள் போதை பொருட்கள் கணக்கில் அடங்காமல் மது கடைகள்,மனமகிழ் மன்றங்கள்,காவல்துறை அரசின் மெத்தனபோக்கே இவற்றை மிக தீவிரமாக ஆராய்ந்து பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்திட வேண்டும் ஓபிசி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்று அறிவித்து அவற்றை ஜாமினில் விட முடியாத குற்றங்களாக சட்டதிருத்தங்கள் கொண்டுவர வேண்டும் உட்பட 12-அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்தில் உபதலைவர் வெள்ளிங்கிரி, செயலாளர் திருஞானசம்மந்தம், அமைப்பாளர்கள் குணசேகரன், சர்வேஸ்வரன், சிவசண்முகம் மற்றும் கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.