பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சித்தி ஷாஹிதா- 494 மதிப்பெண்களும், ஹசிபா சபின்-493 மதிப்பெண்களும், வேதிகா, நிராஜ் பாண்டியன் ஆகிய மாணவர்கள் 491 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை ஆயிரவைசிய கல்விக் குழு தலைவர் ராசி போஸ், இணைத்தலைவர் பாலுச்சாமி, செயலாளர் முருகானந்தம், பொருளாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் கல்விக் குழு உறுப்பினர்கள்,ஆசிரியர்கள் கலந்து கொண்டு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
பட விளக்கம்.
பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிக் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு நிர்வாகம் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.