தஞ்சாவூர் மார்ச்.22
வாக்காளர் பட்டியல் வாக்கு சாவடிகள் தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆலோசனை நடத்தினார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்கு சாவடி அமைத்தல் தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுட னான ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு கூட்டம் நடை பெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது
வாக்களிக்கும் இடத்தில் வாக்காளர்களுக்கான அத்தியாவ சிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும். வார்டுகள் பிரிக்கும் போது மக்கள் வாக்களிக்கும் இடம் குறைந்த பட்சதூரத்தில் இருப்பது அவசியமாகும்.
வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்களின் பெயர்களை நீக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) சரவணன் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



