By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடலோர நிலப்பரப்பு கடலுக்குள்… கடலரிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடலோர நிலப்பரப்பு கடலுக்குள்… கடலரிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்
கனஂனியாகுமரி

கடலோர நிலப்பரப்பு கடலுக்குள்… கடலரிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்

Last updated: May 28, 2025 5:16 pm
May 28, 2025 22 Views
Share
SHARE

கடலோர நிலப்பரப்பு கடலுக்குள்… கடலரிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்
குறும்பனை பெர்லின் வேண்டுகோள்.

இன்னும் பத்து ஆண்டுகளில் இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் பாதி கடலரிப்பால் கடலுக்குள் சென்றுவிடும் ஆபத்து உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதை முன்னெச்சரிக்கையாகத் தடுத்திட கடலரிப்பை தேசியப் பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் இதை முதன்மையான கோரிக்கையாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது..
இந்தியாவின் சுமார் 8000 கி.மீ. நீளமுள்ள கடற்கரையின் தற்போதைய முதன்மையான பிரச்சனை கடலரிப்பு என்ற பேரிடர்தான். புவி வெப்பமயமாவதால் பனிப்பாறைகள் உருகி கடலில் வந்து சேர்வதாலும் கனிம மணலை அள்ளி தாதுக்களைப் பிரித்தெடுக்க கடற்கரையின் பாதுகாப்பு அரணாக உள்ள மணல்மேடு மணல் குன்றுகளை மணல்ஆலைகள் தோண்டி எடுப்பதாலும் கடலரிப்பைக் கட்டுப்படுத்த கடற்கரைகளில் போடப்படுகின்ற தவறான கட்டுமானங்களின் எதிர் வினையாலும் கடலரிப்பு என்ற பேரிடர் மிகப்பெரும் அளவு இந்திய கடற்கரைகளை அழித்துக்கொண்டிருக்கிறது. குமரிமாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளில் சுமார் 200 மீட்டர் கடற்கரை நிலங்களும் ஏழு வரிசை குடியிருப்புகளும் தடுப்புச் சுவர், தூண்டில் வளைவு துறைமுகம் என்ற கட்டுமானங்களும் கடலுக்குள் சென்றுவிட்டன. கடலரிப்புக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிந்து அதைத் தடுக்கும் முயற்களைச் செய்யாமல் மீனவ மக்களை வேறு இடங்களுக்கு வெளியேற்றும் வேலைகளைத்தான் மத்திய- மாநில அரசுகள் செய்துகொண்டிருக்கின்றன.
கடலரிப்பைத் தேசிய பேரிடராக அறிவித்து கடலரிப்புக்கான காரணங்களைக் கண்டறிந்து அதைத் தடுக்கவும் கடலரிப்பின்மூலம் ஏற்படும் பாதிப்புகளை தடுத்திடவும் பாதிக்கப்படும் மக்களுக்கு மீட்பு நிவாரணம் மறுகட்டமைப்பு போன்ற வாழ்வாதார வசதிகளை செய்திடவேண்டுமானால் கடலரிப்பைத் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று நெய்தல் மக்கள் இயக்கம் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து போராடிக் கொண்டிருக்கிறோம். எங்கள் கோரிக்கையை ஏற்று 2010-ம் ஆண்டு அப்போதைய கலெக்டர் திருமிகு. ராஜேந்திர ரத்னூ அவர்கள் விரிவான கருத்துரு தயாரித்து கடலரிப்பைத் தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க டெல்லி சென்று பல முயற்சிகளைச் செய்தார்கள். அவருக்குப்பின் அந்த கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது. தொடர்ந்து நாங்கள் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக கடலரிப்பு, கடல் கொந்தளிப்பு, இடி- மின்னல் போன்றவற்றை மாநில பேரிடராக அறிவித்து மாநில பேரிடர் நிதியிலிருந்து பத்து சதவிகிதத்தை முன்னெச்சரிக்கை- மீட்பு- மறுகட்டமைப்புப் பணிகளை செய்யவேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். மாநில பேரிடருக்கென்று நிதி வழங்காததாலும் நிதியைக் குறைத்ததாலும் கடலரிப்பைத் தடுப்பதற்கான தொலைநோக்குத் திட்டத்தை மாநில அரசால் செயல்படுத்த முடியவில்லை.
எனவே, கடலரிப்பை தேசிய பேரிடராக அறிவித்து அந்த நிதிமூலம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான் இனிவரும் காலங்களில் கடற்கரை பிரதேசங்களை கடலரிப்பிலிருந்து பாதுகாக்க முடியும். அதை மத்திய அரசு உடனே செய்யவேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறோம் என்று குறும்பனை பெர்லின் கூறினார்.

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

நாகர்கோவிலில் கலைஞர் நினைவு தின அமைதிப் பேரணி; மேயர் மகேஷ் அறிக்கை

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான கூடைப்பந்து அணி தேர்வு

July 25, 2025 10 Views
திருமலை குமாரசுவாமி திருக்கோவில்அறங்காவலர் குழு தலைவராக அருணாசலம் பொறுப்பேற்பு
நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
பெற்றோர் இல்லாத 597 குழந்தைகளுக்கு உதவிகள் செய்ய நடவடிக்கை
5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?