திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் உத்தரகோசமங்கை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் லாந்தை, பனைக்குளம், களரி, வெள்ளா, உத்தரகோசமங்கை, ஆலங்குளம், நல்லிருக்கை, எக்ககுடி ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய கிராம மக்கள் பங்கேற்று மனுக்கள் வழங்கினர். முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி, கீழக்கரை தாசில்தார் ஜலால் முகம்மது, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயக்குமார், உத்தரகோசமங்கை ஊராட்சி மன்ற தலைவர் கருங்கம்மாள் முத்து உட்படப் பலர் கலந்து கொண்டனர்.