கிருஷ்ணகிரி,ஆக.21- கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் ஒன்றியம் மிட்டஅள்ளி சாப்பர்த்தி ஆகிய ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பட்டா மாறுதல், வீட்டுமனை பட்டா, ஓய்வூதியம், குடும்ப அட்டை, பெயர் சேர்த்தல் நீக்கல், மற்றும் மருத்துவத் துறை, காவல்துறை, மின்சாரத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, வேளாண்மைதுறை, உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை பெற்று கணினியில் பதிவிறக்கம் செய்து 30 நாட்களுக்குள் அதற்கான தீர்வு கிடைக்கும் என அதிகாரிகள் பொதுமக்களிடம் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கோ.காவேரி, ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் சசிகலா தசரா, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சின்னக்கண்ணு கோவிந்தன், ஊராட்சி செயலாளர் சிவப்பிரகாசம், சாப்பர்த்தி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பார்வதி சரவணன், (பொறுப்பு) தலைவர் ஆர்.முருகன், ஊராட்சி செயலாளர் என். செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் கிருஷ்ணகிரி உதவி இயக்குனர் ஊராட்சிகள் மகாதேவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு பார்வையிட்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் வழங்கினர்.



