சிவகங்கையை அடுத்துள்ள அண்ணாமலை நகரில் ராணி வேலுநாச்சியார் அறக்கட்டளை சிறப்பாக செயல்பட்டு வருகிறது . இந்த அறக்கட்டளை நிர்வாகத்தின் சார்பில் சிவகங்கையில் உள்ள ஆர். ஆர்.ஆர். கே . நடுநிலைப் பள்ளியில் செயல்படும் என். எஸ். கிருஷ்ணன் நினைவு காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது . இந்த நிகழ்வில் அறக்கட்டளையின் தலைவர் ஜெயகரன் , செயலாளர் வீரய்யா,பொருளாளர் உடையப்பன், மற்றும் நிர்வாகிகள் நிசியன் ,முத்துராமலிங்கம் , மல்லல் அதிபதிராஜா மற்றும் அசோக் ஆகியோர் பங்கேற்று உணவளித்தனர் . முடிவில் காப்பகத்தின் தலைமை ஆசிரியர் சுரேஷ்ஜான்தாமஸ் நன்றி கூறினார் .



