கமுதி ஊராட்சி ஒன்றிய சேர்மன் தமிழ்ச்செல்வி போஸ் உருக்கமான பேச்சு!
ராமநாதபுரம், நவ.7-
கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் நினைவு இடத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர்
வருகையால் மிகவும் சிறப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் சிறப்பாக பணியாற்றி சிறந்த முறையில் தேவர் ஜெயந்தி விழாவை சிறப்பாக நடத்தியது நமக்கு பெருமை இதற்காக அனைவருக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என்று கமுதி யூனியன் சேர்மன் தமிழ்ச்செல்வி போஸ் உருக்கமாக பேசினார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியம் கவுன்சிலர் கூட்டம்
ஊராட்சி ஒன்றிய சேர்மன் தமிழ்செல்வி போஸ் தலைமையில் ஆனையாளர் சந்திரமோகன் ஒன்றிய துணை பெரும் தலைவர் சித்ரா அய்யனார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மேனேஜர் கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார். மொத்தம் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஊராட்சி ஒன்றிய சேர்மன் தமிழ்ச்செல்வி போஸ்
பேசியதாவது:
கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் நினைவு இடத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர்
வருகையால் மிகவும் சிறப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் சிறப்பாக பணியாற்றி சிறந்த முறையில் தேவர் ஜெயந்தி விழாவை சிறப்பாக நடத்தியது நமக்கு பெருமை இதற்காக அனைவருக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
நமக்கு தண்ணீர் அத்தியாவசியம். மழை பெய்ய தாெடங்கிவிட்டன. மழைநீரை விணாக்காமல் சேமிக்க வேண்டும். தேவர் குருபூஜைக்கு முதல்வர் வருகை தந்ததையொட்டி பசும்பொன்னில் குடிநீர் தட்டுப்பாடு இன்றி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மழை நேரத்தில் போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக கண்மாயில் தண்ணீர் வரத்து குறித்து கவுன்சிலர்கள் கண்காணித்து உரிய தகவல் கொடுத்தால் சம்பந்தப்பட்ட துறை மூலம் கூறிய தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் காலத்தில் போன்ற தொற்று நோய் பரவாமல் இருக்க உள்ள எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மருத்துவ உதவி தேவைப்பட்டால் யூனியன் அதிகாரியிடம் தகவல் கொடுத்தால் கிராமங்களுக்கு மருத்துவரை அனுப்ப ஏற்பாடு செய்யப்படும், இவ்வாறு பேசினார்.