தஞ்சாவூர். ஏப்ரல்.23.
தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டங்கில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவி தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அடங்கிய 810 மனுக் களை மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் வழங்கினார்கள்.
இம்மனுக்கள் மீது உரிய நடவடிக் கை உடனடியாக மேற்கொள்ளு மாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களு க்கு மாவட்ட கலெக்டர் உத்திர விட்டார். பின்னர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டத்தை சேர்ந்த செல்வன் ஹரிஹரன் என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததற்காக அவரின் குடும்ப உறுப்பினர்களுக் கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூபாய்1 இலட்சத் திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் தனி துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் (பொ) திருமால், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன்., வட்டார வழங்கல் அலுவலர் கமலகண்ணன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.