தென்காசி மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரகப்பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தொடங்கி வைத்ததை தொடர்ந்து தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை ஊராட்சி விவேகானந்தா நடுநிலைப் பள்ளியில் ஊரகப்பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் துவக்கவிழா தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் மற்றும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு உணவு வழங்கி அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்கள்.நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் கலந்து கொண்டனர்.



