எம் பி டாக்டர் ராணிஸ்ரீ குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்
சங்கரன்கோவில்; நவ:9
சங்கரன்கோவிலில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 85.44 லட்சம் செலவில் கட்டப்பட்ட நான்கு வகுப்பறைகள் துணை கட்டிடங்களை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் கலந்துகொண்டு முதல்வர் காணொளி வாயிலாக வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்த பின் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார் தொடர்ந்து தலைமையாசிரியர் உள்பட ஆசிரியப் பெருமக்கள் மாணவியர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர் நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் என் கே எஸ் டி சுப்பிரமணியன் தலைமையாசிரியர் கீதா வேணி பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்கள்
விஜய பிரியா அண்ணாமலை புஷ்பம் வட்ட கழகச் செயலாளர் இளங்கோ மாரியப்பன் திஷா கமிட்டி உறுப்பினர் வழக்கறிஞர் சதீஷ் மற்றும் கவுன்சிலர்கள் ஆசிரியப் பெருமக்கள் மாணவியர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது.