திருவாரூர்
மார்ச் 30
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் ரூ.80.86 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து மகளிர் காவல் நிலைய புதிய கட்டடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ரூ.80.86 லட்சம் மதிப்பீட்டில் 2629 சதுர அடி பரப்பளவில் தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் அமையப்பெற்றுள்ளது.
தரைதளத்தில் 1298 சதுர அடி பரப்பு கொண்ட தளத்தில் ஆய்வாளர் அறை, எழுத்தர் அறை, நிலைய காவலாளி அறை மற்றும் ஆயுத வைப்பு அறை, கைதி அறை (ஆண்கள்), கைதி அறை (பெண்கள்) மற்றும் குழந்தைகள் பேணும் அறையுடன் அமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் 1201 சதுர அடி பரப்பு கொண்ட தளத்தில் கணினி அறை, உதவி ஆய்வாளர் அறை, ஆலோசனை அறை மற்றும் ஓய்வு அறையுடன் அமையப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம் மற்றும் கழிப்பறை வசதிகள் அமையப்பட்டுள்ளது.
நல்ல தரமான நிலத்தடி நீர் ஆழ்துளை கிணறு மூலம் கிடைக்க அமையப்பட்டுள்ளது மற்றும் மழைநீர் சேகரிப்புகள் அமைக்கப்பட்டுள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய புதிய கட்டடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டதனை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யு.கருண்கரட் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் சௌம்யா, துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ்மாறன், நன்னிலம் வட்டாட்சியர் ரஷியாபேகம், பேரூராட்சி மன்ற தலைவர் ராஜசேகரன், காவல் ஆய்வாளர் சங்கீதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.