[6:47 pm, 19/8/2024] +91 883 838 6363: மதுரை ஆகஸ்ட் 20,
பழைய வாகனங்களை குறைந்த விலைக்கு தருவதாகக் கூறி செல்போனில் பேசி ஏமாற்றி
பணமோசடி செய்த நபர் கைது
மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, மற்றும் சைபர் குற்றங்கள் போன்ற குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். கடந்த 02.09.2023ம் தேதி மதுரை மாவட்ட சரக காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை பழைய வாகனங்களை குறைந்த விலைக்கு தருவதாக கூறி செல்போனில் பேசி பணம் ரூ.2,39,400/-ஐ பெற்றுக்கொண்டு ஏமாற்றி வாகனத்தை தராமல் பணமோசடி செய்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரின் பேரில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சைபர் கிரைம் அவர்கள் தலைமையில் இயங்கி வரும் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக குற்றவாளியை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேற்படி குற்றச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ததில் பழைய வாகனங்களை குறைந்த விலைக்கு தருவதாக கூறி செல்போனில் பேசி பணம் ரூ.2,39,400/-ஐ பெற்றுக்கொண்டு ஏமாற்றிய நபர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சோலையன் மகன் மாணிக்கம் என்பதும் அவர் தற்போது கோயமுத்தூரில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. மேற்படி எதிரியை தனிப்படையினர் கைது செய்து அவரிடமிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய செல்போன், சிம்கார்டுகள் ஆகியவற்றை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருச்சி மற்றும் கோயமுத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் குற்றவாளி கைவரிசை காட்டியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குற்றச்சம்பவம் தொடர்பாக குற்றவாளி யாரென்று கண்டறிந்து கைது செய்த தனிப்படையினரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். மேலும், இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை
மேற்கொள்ளப்படும் ST601 மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளதோடு பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்கள் சம்பந்தமாக
பாதிக்கப்பட்டால் பொதுமக்கள் தாமதம் செய்யாமல் 1930 என்ற கட்டணமில்லா தொலைப்பேசியை தொடர்பு கொண்டும் அல்லது இதர சைபர் குற்றங்கள் சம்பந்தமாக
பாதிக்கப்பட்டால் www.cybercrime.gov.in
கொடுக்கவும் மதுரை புறநகர் மாவட்ட மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
[6:47 pm, 19/8/2024] +91 883 838 6363: