தென்காசி மாவட்டம் தென்காசி நகரின் மத்திய பகுதியில் 1923 ம் ஆண்டு துவங்கப்பட்ட ஐ சி ஐ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி துவங்கப்பட்டு நூற்றாண்டை கடந்த நிலையில் பள்ளியின் நுழைவாயில் பகுதியில் இருந்த சிறிய அளவிலான வளைவை முன்னாள் மாணவரும் தென்காசி நகர் மன்ற தலைவருமான சாதிர் ஏற்பாட்டில் ரூ.7 லட்சம் செலவில் புதிதாக நூற்றாண்டு வளைவு அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நடைபெற்றது. திறப்பு விழாவிற்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமை வகித்தார். சங்கரன்கோவில் சட்ட மன்ற உறுப்பினர் ராஜா முன்னிலை வகித்தார். தென்காசி நகர் மன்ற தலைவரும் பள்ளியின் முன்னாள் மாணவருமான சாதிர் பங்கேற்று நூற்றாண்டு நுழைவு வளைவினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், காங்கிரஸ் துணை தலைவர் சித்திக் , தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் சந்தோஷ், தென்காசி நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் காதர் மைதீன், மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் ,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ,பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



